Home இலங்கை சமூகம் ஜப்பான் புறப்படும் முதல் நிவாரணக் குழு

ஜப்பான் புறப்படும் முதல் நிவாரணக் குழு

0

ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்த பேரிடர் மேலாண்மை வைத்திய குழுவின் வெற்றிக்கு சுகாதார அமைச்சு வழங்கிய சிறந்த தலைமைத்துவமும் ஆதரவும் முக்கிய பங்கு வகித்ததாக இவாஸ் கிச்சிரோ கூறுகிறார்.

ஜப்பான் குழு செய்த சேவைகள்

இந்த நிபுணர்கள் குழு இன்றிரவு (15.12.2025) ஜப்பான் நோக்கி புறப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட திடீர் பேரிடரை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இலங்கைக்கு வந்த ஜப்பானிய வைத்திய நிபுணர்கள் குழு இன்று (15.12.2025) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்கவை சந்தித்தது.

இந்தக் குழு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நாட்டில் தங்கியிருந்து, சிலாபம் தலைமையக பொலிஸ் மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறப்பு மருத்துவமனையில் சிலாபம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏராளமான மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கியது.

நிவாரண சேவைகளை வழங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்த அவசரகால பேரிடர் மேலாண்மை நிபுணர்களின் முதல் குழு இதுவாகும்.

   

NO COMMENTS

Exit mobile version