Home இலங்கை சமூகம் வீதி அபிவிருத்திக்கு ரூ.24 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

வீதி அபிவிருத்திக்கு ரூ.24 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

0

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகரில்
இருந்து கூபா நகருக்குச் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் (km) தூரமான வீதிக்கான
அபிவிருத்திப் பணிகள் இன்று (15.12.2025) காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

24 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இந்த ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை
மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்துகொண்டார்.

அத்துடன், கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச சபையின் மக்கள் சக்தி
உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, “இன்று நாங்கள்
மூன்றரை கிலோமீட்டர் தூரமான வீதியை ஆரம்பித்து வைத்துள்ளோம். பல வீதிகளை
ஆரம்பிக்க உள்ளோம். அவற்றில் ஒன்றுதான் இந்த வீதியாகும்.

கிராமிய வீதி
அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதி அமைக்கப்படவுள்ளது. இதற்கு 24
மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இதுபோன்று பல வீதிகளைச் செய்யவுள்ளோம் என்றும், அதற்கு 180
மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்தப் பணிகள் மிக விரைவில்
ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version