Home சினிமா மனைவி பற்றி போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி! அதிர்ச்சி குற்றச்சாட்டு

மனைவி பற்றி போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி! அதிர்ச்சி குற்றச்சாட்டு

0

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

அதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் அதை பற்றி வந்து கொண்டிருக்கிறது. விவாகரத்துக்கு காரணம் ஒரு பாடகி என ஒரு தகவல் பரவிய நிலையில், அது உண்மை இல்லை என ஜெயம் ரவி தெரிவித்து இருந்தார்.

மேலும் மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அது அவருக்கு நன்றாகவே தெரியும். எதுவுமே தெரியாது என ஆர்த்தி சொல்வது பொய் எனவும் ஜெயம் ரவி குற்றம்சாட்டினார்.

போலீசில் புகார்

தற்போது ஜெயம் ரவி சென்னை அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

சென்னை ECR ரோட்டில் இருக்கும் ஆர்த்தியின் வீட்டில் இருந்து தான் வெளியேல் வந்துவிட்ட நிலையில், தன்னுடைய உடமைகளை மீட்டு தரும்படி அவர் கேட்டிருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version