Home இலங்கை சமூகம் நீதிமன்ற வாசலில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த அதிகாரி!

நீதிமன்ற வாசலில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த அதிகாரி!

0

இந்திய கடற்றொழிலாளர்களை நீதிமன்றத்தின் வெளியே இருந்து காணொளி எடுத்த ஊடகவியலாளர்
மு.மதிவாணன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் வெளியில் இருந்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரை
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி தடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அச்சுறுத்தல்

உமக்கு எதிராக வழக்குப் போடுவன் என்று அச்சுறுத்தி செய்தி சேகரிக்க முனைந்த
போது கமெராவை தட்டிவிட்டு செய்தி சேகரிக்க விடாது தடுத்து
அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனாலும் ஊடகவியலாளர் தனது செய்தி சேகரிக்கும் உரிமையை எடுத்துரைத்த போதும்
சிறைச்சாலை அதிகாரி அச்சுறுத்தல் விடுத்த வண்ணமே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version