Home இலங்கை சமூகம் ஜனாதிபதி அநுர யாழ். விஜயம் – அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்

ஜனாதிபதி அநுர யாழ். விஜயம் – அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார வருகைதந்தார்.

இதன்போது அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.

நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்

காவல்துறையினர், வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை தகாத வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளினர்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் காவல்துறையினர், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் காவல்துறையினர் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.  

NO COMMENTS

Exit mobile version