Home இலங்கை சமூகம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: தொடரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: தொடரும் போராட்டம்

0

கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக 31ஆவது நாளான நேற்று (24) பல்வேறு பதாகைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புனித மருதமடு மாதாவின் திருச்சொரூபத்திற்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு

போலி வாக்குறுதிகள்

கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாக மக்கள் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.

மேற்குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

ஈரான் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version