Home சினிமா 27 ஆண்டுகளுக்கு பின் மருதநாகயகம் படத்தை மீண்டும் இயக்கும் கமல் ஹாசன்.. எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

27 ஆண்டுகளுக்கு பின் மருதநாகயகம் படத்தை மீண்டும் இயக்கும் கமல் ஹாசன்.. எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

0

மருதநாயகம்

கமல் ஹாசனின் கனவு திரைப்படம் மருதநாயகம். Samuel Charles Hill எழுதிய யூசப் கான் புத்தகத்தை 80சதவீதம் தழுவி, கமல் ஹாசன் மற்றும் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதை தானாம் இது.

இப்படத்தின் துவக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபத் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் கனவு படமாக மருதநாயகம் இருந்தாலும், அதனை இதுவரை நம்மால் திரையில் காணமுடியவில்லை.

விஜய்யை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு.. மாஸ் கூட்டணி

விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் கூட, மருதநாயகம் படம் மீண்டும் எடுப்பேன், எனக்கு பதிலாக வேறு யாரவது ஹீரோவாக நடிப்பார் என கமல் கூறியிருந்தார்.

27 ஆண்டுகளுக்கு பின் மருதநாகயகம்

இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படம் மீண்டும் எடுக்க கமல் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு அந்த கதாபாத்திரத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதற்காக தான் தற்போது வெளிநாட்டில் ஏஐ படித்து வருகிறாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version