அதிதீவிர வானிலையால் கண்டி – ஹசலக்கவில் உள்ள யஹங்கல பகுதியில் மண்மேடு சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவசர பேரிடர் மையம்
நாட்டில் தற்போது நிலவி வரக்கூடிய வானிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு ஆர். பிரேமதாச மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது.
அதன்படி, தற்போது மூவாயிரம் பேர் கொண்ட குழுவிற்கு குறித்த மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
