Home இலங்கை சமூகம் கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு: 6 பேர் கைது

கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு: 6 பேர் கைது

0

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில்
ஒளிப்பாய்ச்சி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(10.04.2025) காலை நடைபெற்றுள்ளது.

கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த
கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டதுடன் காங்கேசன்துறையில்
இருந்து அதிவிரைவு டோரா படகும் வரவழைக்கப்பட்டு குறித்த கடற்பகுதி
சுற்றிவளைக்கப்பட்டது.

மேலதிக சட்ட நடவடிக்கைகள்

இந்த நடவடிக்கையின் போதே சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்டு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version