Home இலங்கை குற்றம் யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

0

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில்  பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,  இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
நெல்லியடி விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைப்பு நாகர் கோவில்
பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது.

மேலதிக விசாரணை

இந்த சுற்றிவளைப்பில் பொதிகள் 40 அடங்கிய 81kg.300g கேரளா கஞ்சா
மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார்.

மேலும், மீட்கப்பட்ட கேரளா
கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version