Home ஏனையவை வாழ்க்கைமுறை நாட்டில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய்

நாட்டில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய்

0

நாட்டில் பத்து வீதமானவர்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதான ஆலோசகர் நிபுணத்துவ வைத்தியர் சஞ்சய ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

மேலும், நீரிழிவு நோய்களினால் நாட்டில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மூன்றரை லீட்டர் நீர் 

இந்நிலையில் உப்பு, சீனி மற்றும் எண்ணெய் போன்ற உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாளொன்றுக்கு மூன்றரை லீட்டர் நீர் அருந்துவதன் மூலம் சிறுநீரக நோய்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் சஞ்சீவ ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/kidney-disease-increase-1714388782

NO COMMENTS

Exit mobile version