Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையால் அதிகரித்துள்ள நெல் இலைச்சுருட்டி நோய் தாக்கம்

சீரற்ற காலநிலையால் அதிகரித்துள்ள நெல் இலைச்சுருட்டி நோய் தாக்கம்

0

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து கிளிநொச்சி(Kilinochchi) மாவட்டத்தின் நெல் வயல்களில் “மடிச்சுக்கட்டி “என்ற நெல் இலைச்சுருட்டி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2024ம் ஆண்டு கால போக குளங்களின் கீழான நெற்ச்செய்கை மற்றும் மானாவாரி நெற் செய்கையாக மாவட்டத்தில் 70,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நெற்பயிர்களில் மடிச்சுக்கட்டி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நோய்த்தாக்கம்

கிளிநொச்சி புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தின் கீழ் 30,000இற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மடிச்சுக்கட்டி நோயினால் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு போகத்தை மட்டும் வாழ்வாதாரமாகவும் உணவுத்தேவைக்காகவும் நெற் செய்கை மேற்கொள்கின்ற நிலையில் அதிகரித்த நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த போகங்களிலும் தாம் நஷ்டத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், உரிய அதிகாரிகள் குறித்த நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version