Home இலங்கை சமூகம் கிண்ணியா நகர சபையும் ASM நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் திட்டம்

கிண்ணியா நகர சபையும் ASM நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் திட்டம்

0

கிண்ணியா நகர சபையும் ASM நிறுவனமும் இணைந்து நகர சபையில் பல்வேறு வேலை
திட்டங்களை முன்னெடுப்பதற்கு இணக்கத்தை எட்டியுள்ளன.

அதன் ஒரு அங்கமாக கிண்ணியா வாராந்த சந்தை அடங்கலான மட்டக்களப்பு வீதியை அண்டிய
பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு வளர்ந்து வரும் சுற்றுலா துறைக்கும் நவீன
மயமாக்கலுக்கும் ஏற்ற வகையில், அப்பிரதேசத்தை பொலித்தீன், பிளாஸ்டிக் அற்ற
வலயமாக (Polythene and Plastic free zone) பிரகடனம் செய்யும் வேலை திட்டங்கள்
இன்று(28) அரங்கேற்றப்பட்டன.

அத்துடன், சந்தை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் என பல்வேறு
தரப்பினருக்கும் இது குறித்த விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து சிறப்பித்த பலர்

இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி, ASM நிறுவன நிறைவேற்று
பணிப்பாளர், பிரதி தவிசாளர் அஸீஸ், நகர சபை உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ASM நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
சிறப்பித்தனர். 

NO COMMENTS

Exit mobile version