எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.
பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்னுற்பத்தி
குறித்த விஜயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற
உறுப்பினர் இளங்குமரன், கடற்தொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன்
மோகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
