விடுதலைப்புலிகளுடன் சண்டைகள் மூழ்கின்ற பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் நகரையும் அங்கு நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப்படைகள் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் அக்காலத்தில் நிலை கொண்டிருந்தன.
1987ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் திகதி இத்திட்டத்துடனே இந்தியப்படைகள் தாக்குதல் நடத்தியிருந்தபோதும் குறித்த தாக்குதலில் தோல்வியடைந்ததால் பாரிய பின்னடைவை இந்திய இராணுவம் சந்தித்தது.
பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாண கோட்டைக்குள் இந்தியப் படைகள் அடைபட்டிருந்தமை பீதியான நிலையை அவர்களுக்கு தோற்றுவித்தது.
இந்நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாண நகரின் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி இந்தியப் படைகள் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
இதன் விளைவாக பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இதனால் பல தமிழ் மக்கள் அகதி வாழ்க்கைக்கு நோக்கிச் செல்ல தள்ளப்பட்டார்கள்.
இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் அவலங்களின் அத்தியாயங்கள் நிகழ்ச்சி…
