Home இலங்கை சமூகம் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (19) மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மண்சரிவு அபாய எச்சரிக்கை

அதன்படி களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையும் காலி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே அந்த பகுதி மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

 

Source: https://tamilwin.com/article/landslide-warning-for-seven-districts-1723987157

NO COMMENTS

Exit mobile version