Home இலங்கை பொருளாதாரம் டொலர்களை அள்ளி கொட்டும் மத்திய கிழக்கு பணியாளர்கள்! அரசாங்க வருமானம் அதிகரிப்பு

டொலர்களை அள்ளி கொட்டும் மத்திய கிழக்கு பணியாளர்கள்! அரசாங்க வருமானம் அதிகரிப்பு

0

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களில் இலங்கைக்கு நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.

அதிகூடிய டொலர் வருமானம்

கடந்த ஏழு மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் 2.23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும் அதில் கணிசமான அளவு பிரசார மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக மீண்டும் வெளிப்பாய்ச்சப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில், மத்திய கிழக்குப் பணியாளர்களே அண்மைக்காலத்தில் அதிகூடிய டொலர் வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர்.  

Source: https://tamilwin.com/article/lankan-government-revenue-from-middle-east-workers-1755479538

NO COMMENTS

Exit mobile version