Home இலங்கை குற்றம் வவுணதீவு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

வவுணதீவு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

0

மட்டக்களப்பு (Batticaloa) வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில்
கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி,டி,பி.
சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த வயல் பிரதேசத்திலுள்ள கசிப்பு
உற்பத்தி நிலையத்தை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் பொலிஸாரை கண்டு தப்பி ஓடிய
நிலையில், கசிப்பு தயாரிப்பதற்காக 14 பரல்களில் தயாராக இருந்த கோடாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/leaking-production-plant-vavunathivu-under-siege-1737177021

NO COMMENTS

Exit mobile version