Home இலங்கை குற்றம் நுவரெலியாவில் சொகுசுக் கார் ஒன்றின் மின்குமிழ்கள் திருட்டு

நுவரெலியாவில் சொகுசுக் கார் ஒன்றின் மின்குமிழ்கள் திருட்டு

0

நுவரெலியா (Nuwara Eliya) – கொட்டக்கலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் கார் ஒன்றின் முகப்பு
மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் நேற்று (23.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரானது, உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட
நிலையிலேயே காரில் இருந்த மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளன.

புத்தளம் – குருணாகல் பிரதான வீதியில் விபத்து : மூவர் படுகாயம்

மேலதிக விசாரணைகள்

அத்துடன், இந்த முகப்பு மின்குமிழ்கள் இரண்டினதும் தற்போதைய சந்தைப் பெறுமதி 350,000 ரூபாய் என உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி – திவாகரன்

சற்றுமுன் யாழ். மானிப்பாய் பகுதியில் கோர விபத்து – ஒருவர் படுகாயம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஏற்பட்ட பதற்றம் – ஆயுதாரிகள் துப்பாக்கி சூடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version