Home இலங்கை சமூகம் ஒரு பில்லியன் ரூபாய்களை ஏய்ப்பு செய்த மது உற்பத்தி நிறுவனம்!

ஒரு பில்லியன் ரூபாய்களை ஏய்ப்பு செய்த மது உற்பத்தி நிறுவனம்!

0

ரந்தெனிகலவில் அமைந்துள்ள மதுபான உற்பத்தி நிறுவனமொன்று, ஒரு
மாதத்திற்குள் 1,358,773,144 ருபாய் அதாவது 1.35 பில்லியன் ரூபாய் வரியை
செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொழும்பு
மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜா இன்று இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணை

இந்த தொகையை அந்த நிறுவனம் ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, 2012 மற்றும் 2015 க்கு இடையில் அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான
வரி, வெட் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை நிறுவனம் செலுத்தத்
தவறியதாகக் கூறி உள்நாட்டு வருவாய் ஆணையாளர், தாக்கல் செய்த வழக்கு
விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version