மட்டக்களப்பு (Batticaloa) – கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை
இதன்போது, 23 பரள்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம்
மில்லி லிட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர்
கசிப்பு, பெருமளவிலான உபகரணங்கள், பரள்கள், போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த தோனியும் பொலிஸாரினால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே
தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கொக்கட்டிச்சோலை சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
