Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலே 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் 

அதன்படி, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 382 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

அத்துடன் ஏனைய விடயங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version