Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு தேவையான பணம் ஆணைக்குழுவிடம் இல்லை என அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R. M. A. L. Rathnayake) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குச் செய்த அடிப்படைச் செலவுகளைத் தவிர, மீதிப் பணம் அனைத்தும் திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் மேலும் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/local-government-elections-sri-lanka-1724519985

NO COMMENTS

Exit mobile version