Home இந்தியா தமிழ்நாட்டில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

தமிழ்நாட்டில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

0

தமிழ்நாடு திருச்சியில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

இதில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் கலந்துகொண்டார்.

மாவீரர்நாள் நிகழ்வு

அத்தோடு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானும் (Seeman) சென்னையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மேலும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான பதிவொன்றை நடிகரும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் (Vijay) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/maaveerar-day-celebration-in-tamil-nadu-thiruchi-1732740314

NO COMMENTS

Exit mobile version