மஹரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் முன்னால் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
விசேட அதிரடிப்படை
குறித்த சம்பவத்தில் தெஹிவளைப் பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான மோட்டார் சைக்கிள் ஓட்டி கஹதுடுவை பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சுமார் இருபதினாயிரம் மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
