Home இலங்கை சமூகம் உடனடியாக வெளியேறுங்கள்! மகாவலி கங்கையின் நீர்மட்டத்தில் திடீர் மாற்றம்

உடனடியாக வெளியேறுங்கள்! மகாவலி கங்கையின் நீர்மட்டத்தில் திடீர் மாற்றம்

0

மகாவலி கங்கையின் நீர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களால் அப்பகுதியை அண்டியுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

மகாவலி கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மகாவலி படுகையின் கீழ்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, திம்புலாகல, தமன்கடுவ, வெலிகந்த, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை அந்த பகுதிகளை விட்டு விரைவில் வெளியேறி செல்லுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version