Home இலங்கை அரசியல் மகிந்தவின் போர்நிறுத்த அறிவிப்பால் இராணுவத்துக்கு சவாலாகிய பிரபாகரனின் தாக்குதல்

மகிந்தவின் போர்நிறுத்த அறிவிப்பால் இராணுவத்துக்கு சவாலாகிய பிரபாகரனின் தாக்குதல்

0

இறுதிக் கட்டப் போரின் போது, ​​ அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டுவந்த திட்டதின் விளைவாக 500 இராணுவவீரர்கள் கொள்ளப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலாசார நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

“2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போரின் போது, ​​அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவசரகால போர்நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கவைக்கும் செயற்பாட்டை மேற்கோண்டார்.

படையினரைத் தாக்கி சவால் 

எனினும், வேலுப்பிள்ளை பிரபாகரன் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் செல்வதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினரைத் தாக்கி சவால் விடுத்தார்.

பாதுகாப்பு அமைப்பை கருத்தைக் கருத்தில் கொள்ளாமல், ஜனவரி 29 முதல் – பிப்ரவரி 1, (2009 ஆம் ஆண்டு) வரை இந்தப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக தாக்குதலில் கிட்டத்தட்ட ஐநூறு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறினாலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை எந்த நேரத்திலும் தெளிவாகக் கூறுமாறு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version