யுத்தம் நிறைவு பெறுவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு மகிந்த பிறப்பித்த உத்தரவுதான் போர் நீடிக்க காரணம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் முடிவுற வேண்டிய யுத்தம் மே வரை நீடிக்க மகிந்த எடுத்த இந்த முடிவுதான் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம், யுத்தத்தின் இறுதி நேரத்தில் ராஜபக்சர்கள் எடுத்த தவறான முடிவுகள், மற்றும் உத்தரவுகள் தொடர்பான அதிர்ச்சி தரும் காணொளி ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் தான் அதனை வெளியிடப் போவதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,
