Home இலங்கை அரசியல் ரணில் தரப்புக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை – செய்திகளின் தொகுப்பு

ரணில் தரப்புக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை – செய்திகளின் தொகுப்பு

0

அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் அவ்வாறான செயலை
செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முட்டாள்தனமான முடிவு என முன்னாள்
பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று(11.06.2024)இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றில் இதனை கூறியுள்ளார்.

இப்போது நாட்டு மக்கள் மொட்டுக்கட்சி
மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர். எமது கட்சியின் சில உறுப்பினர்கள்
வெளியேறினாலும் எதனையும் இழக்கவில்லை.அதை விட இன்று நாம் பலமாக இருக்கின்றோம்.

தேர்தலை நடத்த வேண்டும். அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு செய்யும் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு
முட்டாள்தனமான விடயம்.ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது
ஐக்கிய தேசியக் கட்சியின் தனிப்பட்ட முடிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவை் உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

Source: https://tamilwin.com/article/mahinda-s-warning-to-ranil-s-side-1718172588

NO COMMENTS

Exit mobile version