அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கைதை அலட்டிக் கொள்ளவில்லை
“அரசியல் செய்தால் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க் கொள்ள வேண்டும். அவர் அதை ஏற்றுக் கொள்வார். அவர் இந்த கைதை அலட்டிக் கொள்ளவில்லை.
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
அரசியலில் ஈடுபடும் போது இவ்வாறான பயணங்கள் சதாரணமானதாகும்.
மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் பழிவாங்கல் மட்டுமே நடக்கிறது” என்றார்.
