Home இலங்கை அரசியல் தென்கொரியாவிற்கு செல்லும் மைத்திரி: வழங்கியுள்ள விளக்கம்

தென்கொரியாவிற்கு செல்லும் மைத்திரி: வழங்கியுள்ள விளக்கம்

0

தென்கொரியாவிற்கு செல்லவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய் பிரசாரங்கள்

அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தாம் வன்மையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருப்பதால், கம்பஹா மாநகர சபையில் உலக தொழிலாளர் தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/maithiri-visits-south-korea-1714294849

NO COMMENTS

Exit mobile version