Home இலங்கை குற்றம் சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது

சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது

0

மாத்தளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெண் உட்பட இருவர் கைது

ஆண் சந்தேக நபர் வத்தளையை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் பெண் சந்தேக நபர் கணேமுல்லயை சேர்ந்த 62 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version