யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் பொலிஸ்
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று(16) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 35 கிலோ 400 கிராம் எடையுடைய
ஆமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
