Home இலங்கை குற்றம் இரு பிள்ளைகளின் தந்தையால் பல பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

இரு பிள்ளைகளின் தந்தையால் பல பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

0

பல மாணவர்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்கள் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், பேராதனை – இஹல முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய சந்தேகநபரை கண்டி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சம்பவம்

தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 பாடசாலை மாணவிகளும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பாடசாலை மாணவியையும் ஐந்து மாணவர்களையும் பல சந்தர்ப்பங்களில் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி மற்றும் 5 மாணவர்களை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

   

சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்ட சந்தேகநபர் நேற்று (02) கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் மற்றுமொரு சிறுவனை அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தவறான செயற்பாட்டிற்கு முற்பட்ட போது சந்தேகநபரின் கையை கடித்து விட்டு சிறுவன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 15 வயதுடைய சிறுமி பேராதனைப் பொலிஸில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இது தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார் சந்தேகநபரை எச்சரித்து விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் வந்த பொலிஸ் குழுவினர் கிரிபத்கும்புர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version