பேருவளை-மாகல்கந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 303.500 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
49 வயதுடைய மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.