Home இலங்கை குற்றம் சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0

அம்பாறை (Ampara)-சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (1) சென்னல்கிராமம் முதலாம் பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 240 மில்லி
கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம்
பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்னமல்லவின் பணிப்புரைக்கமைய உப பொலிஸ்
பரிசோதகர்களான ஜெயஸ்ரீ மற்றும் விஜயஸ்ரீ ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/man-arrested-with-ice-drug-in-sammanthurai-1733146628

NO COMMENTS

Exit mobile version