Home இலங்கை குற்றம் அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்!

அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்!

0

காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 23 கிலோ நிறையுடைய திமிங்கில வாந்தி (அம்பர்) , 5 கோடி ரூபா பெறுமதியுடையதென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

ரத்கம, கனேகொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிழஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version