Home இலங்கை சமூகம் கொழும்பில் வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் கைது

கொழும்பில் வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் கைது

0

கொழும்பின்(Colombo) புறநகர் தலங்கம பிரதேசத்தில் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம்(30) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள காவல்துறையினர், மோசமாக நடந்துக் கொண்ட குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டடம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர்

சந்தேகநபர் தலங்கம, டென்சில் கொப்பே கடுவ மாவத்தை வீதிகளில் பயணித்த வாகனங்கள் மீது இந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் சிலரால் தாக்கப்பட்டு முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்,
தலங்கம படபொத பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version