Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபர்: உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்

தமிழர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபர்: உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்

0

யாழ்ப்பாணம்- கீரிமலையில் ஆணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கீரிமலை வீதி,
சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்றுள்ளார்.

உயிரிழப்பு

இந்தநிலையில், அவர் சங்கானை சந்தையில்
வியாபாரம் செய்கின்றவர் என்பதால் அவரை வியாபாரத்துக்கு அனுப்புவதற்கு
உறவினர்கள் இன்று காலை எழுப்ப முற்பட்டவேளை அசைவற்று காணப்பட்டார்.

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர்
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனை

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version