Home இலங்கை சமூகம் யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்!

யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்!

0

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை
தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தசம்பவம் நேற்று  (30) காலையில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58வயதுடைய ராசேந்திரன் லிங்கரத்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணை

தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது யானை தாக்கியதாகவும் தெரிய
வந்துள்ளது.

 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version