Home இலங்கை குற்றம் சிதைவடைந்த நிலையில் களனி கங்கையில் ஆணின் சடலம்

சிதைவடைந்த நிலையில் களனி கங்கையில் ஆணின் சடலம்

0

கொழும்பு மாவட்டம், முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில்
அமைந்துள்ள களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று(16.05.2025) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் இதுவரை எந்தவித
தகவல்களும் கிடைக்கவில்லை என்று முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

அத்துடன், சடலமானது அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைவடைந்துள்ளது என்றும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version