Home இலங்கை குற்றம் கேகாலை பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கேகாலை பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0

கேகாலை – புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேகம பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலத்கொஹுபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்ட்ட சந்தேக நபர் கங்துன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version