Home இலங்கை குற்றம் கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்புடைய சந்தேகநபரின் உறவினர் யாழில் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்புடைய சந்தேகநபரின் உறவினர் யாழில் கைது!

0

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணம்- மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது இன்று(11) யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த
மாவாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது 

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்த யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version