Home இலங்கை குற்றம் சகோதரர்களுக்கிடையில் கடும் மோதல்! ஒருவர் பலி

சகோதரர்களுக்கிடையில் கடும் மோதல்! ஒருவர் பலி

0

காலி (Galle) – கரந்தெனிய பிரதேசத்தில் சகோதரர்களுக்கிடையிலான
மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காணி விற்பனை தொடர்பில் அண்ணனுக்கும் இரண்டு தம்பிகளுக்கும் இடையில் ஏற்பட்ட
வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக மாறியுள்ளது.

உயிரிழப்பு

இதன்போது அண்ணன் மீது தம்பிகளில் ஒருவர் மண்வெட்டியால் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், அயலவர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு
செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான (39 வயது) நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கரந்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக
வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version