Home இலங்கை சமூகம் யாழில் மீன்வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் மீன்வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்

0

 யாழ்ப்பாணத்தில் இன்று(25) காலை சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி
விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த
செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

குறித்த முதியவர் இன்று காலை மீன் வாங்குவதற்காக காக்கைதீவு சந்தைக்கு
சென்றிருந்தார். இந்நிலையில் சந்தையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணம்

பின்னர் சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
சென்றவேளை அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version