Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் இலட்சக்கணக்கான ரூபாய்களில் விலை போன மாம்பழம்

தமிழர் பகுதியில் இலட்சக்கணக்கான ரூபாய்களில் விலை போன மாம்பழம்

0

வவுனியா (vavunya) – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று (14)மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

மாம்பழம் ஏலத்தில் விற்பனை

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 285,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 285,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/mango-sales-lakhs-of-rupees-in-vavuniya-1723685342

NO COMMENTS

Exit mobile version