மன்னாரில் (Mannar) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (04) இடம்பெற்றுள்ளது.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றிற்கு எதிராகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்திய அதிகாரி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த உணவகம் உரியமுறையில்
பதிவு செய்யப்படாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின்
ஒத்துழைப்புடன் பொது சுகாதார உத்தியோகஸ்தர்களால் உணவகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
குறித்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேற்றப்படாமல் புழுக்கள் மற்றும் இளையான்
உருவாகி ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள்
தயாரிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, கையுறை மற்றும் தலையுறை பயன்படுத்தாமல்,
உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும்
கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான்
நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
