Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி

0

தேசிய ரீதியில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள்
வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் அதிக சித்திகளை மன்/புனித சவேரியார்
ஆண்கள் கல்லூரி பெற்றுள்ளது.

குறிப்பாக இம் முறை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 26 மாணவர்கள்
வெட்டு புள்ளிக்கு அதிகமான மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் விசேட
தேவையுடைய மாணவன் ஒருவரும் இம்முறை சித்தியடைந்துள்ளார்.

புலமை பரிசில் பரீட்சை

மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை சார்பாக கடந்த வருடம் 106 மாணவர்கள் புலமை
பரிசில் பரீட்சை எழுதியிருந்த நிலையில் அவர்களில் 87 வீதமானவர்கள் தேர்ச்சி
புள்ளிகளை பெற்றுள்ளதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான
மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இம்முறை வெளிவந்துள்ள புலமை பரிசீல் பரீட்சையில் மாவட்ட ரீதியாக அதிக
மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு அதிகம் பெற்று சித்திகளை பெற்று மன்/புனித
சவேரியார் ஆண்கள் கல்லூரி மாவட்ட ரீதியாக முன்னிலை வகிக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version