மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு
வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முகாமைத்துவ நிலையம்
அதற்கு அமைவாக பரப்புக்கடந்தான் அடம்பன் தாழ்வு பகுதிகளில் வசிக்கும் மக்கள்
இது தொடர்பில் அவதானமாக இருப்பதோடு பாதுகாப்பு தேவையின் பொருட்டு பாதுகாப்பான
இடங்களை நோக்கி செல்லுமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக நீர்ப்பாசன
திணைக்களத்தின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
