Home இலங்கை சமூகம் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் : மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் : மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்

0

கடந்த சில வருடங்களாக அதிகளவான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஜி. ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

நோய்வாய்ப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதனால் பிரதான விசேட வைத்திய நிலையங்களை(clinic) நடத்துவது கடினமாகிவிட்டதாக வைத்தியர் கூறுகிறார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளை நடத்த போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோய்வாய்ப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், சுகாதார அமைப்பு கடுமையான சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

தேர்தலின் பின்னர் உடனடியாக புதிய கொள்கை

கடந்த அரசுகள் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நடைபெறவுள்ள தேர்தலின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு இது தொடர்பான முரண்பாடுகளை தீர்க்க உடனடியாக புதிய கொள்கைகளை வகுக்க பாடுபட வேண்டும் என வைத்திய நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/many-hospitals-close-doctors-leaving-the-country-1729943457

NO COMMENTS

Exit mobile version